சனி, 1 ஆகஸ்ட், 2009

"போராட்டம் முடிவுக்கு வரவில்லை, போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்": 'த வீக்' வார ஏட்டுக்கு பத்மநாதன் பேட்டி

"எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.


இந்தியாவில் இருந்து வெளிவரும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் அதனை நோக்கிய போராட்டத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் செல்வராஜா பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

"பிரபாகரன்தான் எமது தேசியத் தலைவர். தான் நம்பிக்கை வைத்த கொள்கைக்காக தனது வாழ்க்கை முழுவதையுமே வாழ்ந்தவர் அவர். ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் நிலத்தை மீட்டு எடுப்பதில் சமரசத்துக்கு இடம் இல்லாத நம்பிக்கை வைத்திருந்தவர் அவர். தனது நோக்கத்தில் இருந்து ஒருபோதுமே அவர் பின்வாங்கியதில்லை. சிறிலங்காப் படை இயந்திரத்தின் அனைத்துச் சவால்களையும் பிரபாகரன் எதிர்நோக்கினார். அனைத்துலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையால்தான் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிறிலங்காப் படையால் முறியடிக்க முடிந்தது.

அரச தலைவர்களும், படை ஜெனரல்களும் மாற்றமடைந்தபோது, மிகவும் குழப்பமான நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தனது தாயகத்தில் இருந்துகொண்டே இந்த போரை நடத்தினார். இது ஒரு தற்காப்பு போராகவே இருந்தது. அவர் தமிழர் தாயகத்துக்கு வெளியே போரை கொண்டுசெல்லவோ அல்லது அப்பாவிப் பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகச் செய்யவோ இல்லை. கொள்கையுடைய ஒரு மனிதராக அவர் இருந்தார். தனது இறுதி மூச்சுவரையில் தமிழ் மக்களின் நலன்களிலேயே அவர் கவனமாக இருந்தார். போர் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ஒரு செயல்திறன் மிக்க படையையும் நடைமுறை ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும், நடைமுறை ரீதியான தமிழீழ அரசு ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார்.

சிறிலங்கா அரசு சொல்வது உண்மை என எடுத்துக்கொண்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழீழப் போராட்டத்துக்கும் என்ன நடைபெற்றிருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பலர் சொல்வதைப் போல ஈழக் கனவு முடிவுக்கு வந்துவிட்டதா?

1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை என்ற கருத்துக்கு மக்களின் ஆணை கிடைத்தது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் தமிழர்களின் போராட்டத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. விடுதலைப் புலிகள் படை ரீதியான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது உண்மைதான். 10 ஆயிரத்துக்கும் அதிகமான எமது போராளிகள் சிறிலங்கா அதிகாரிகளினால் அனைத்துலக விதிமுறைகளுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்படடுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன், வன்முறையற்ற ஒரு பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எமது போராட்டம் அரசியல் வழிகளிலேயே முன்னெடுக்கப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய அமைப்பாக தொடங்கப்பட்ட போதிலும் இப்போது ஒரு அனைத்துலகப் பிரசன்னத்தை அது கொண்டுள்ளது. இதனை ஒரு அனைத்துலக அமைப்பாக மாற்றியமைத்து அதன் மூலமாக சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

இதனை ஒரு தோல்வி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு பாரம்பரிய படை என்ற நிலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டது போல, நிச்சயமாக நாம் படைத்துறை ரீதியாக பின்னடைவு ஒன்றைச் சந்தித்துள்ளோம். நாம் இப்போது அனைத்துத் தமிழர்களும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமான அரசியல் பாதை ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் செய்ய வேண்டியது என்ன?

30 வருடங்களுக்கு முன்னர் என்ன காரணத்துக்காக நாம் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினோமோ அது இன்று வரையில் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த சில மாத காலமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோது அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அது தவறிவிட்டது. தற்போது சிறிலங்காப் படையினரால் கொடூரமாக படை மயப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் உள்ளது.

இந்த அப்பாவித் தமிழர்கள் மீது தமக்குள்ள அக்கறையை அனைத்துலக சமூகம் இப்போது வெளிப்படுத்துவதுடன், அவர்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதுள்ள அவசரத் தேவை.

http://www.puthinam.com/

முத்தமிழ்வேந்தன்
சென்னை

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு 2010 ஏப்ரலில் தேர்தல்: வி.உருத்திரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் 'தெகல்கா' வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றி தொடர்பில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? உலகின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் புறநிலை அரசுகளில் இருந்து இது எந்த வகையில் வேறுபட்டு அமைகின்றது?

எமது முயற்சி வெற்றிபெறும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மிகக் கொடூரமான முறையில் சிறிலங்கா அரசு அடக்கி விட்டாலும்கூட, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு என்பவற்றுக்கான அவர்களின் வேட்கையை அடக்க முடியவில்லை.

இப்போது, இலங்கையில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதுடன் மட்டுமல்ல அவர்கள் தமது அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகள் கூடக் கிடையாது. அதனால் தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் முழுவதும் வெளியில் இருந்தே மேற்கொள்ளப்பட முடியும்.

நாங்கள் உருவாக்க முனைவது புறநிலை அரசு அல்ல. நாடு கடந்த அரசு ஒன்றையே நாம் உருவாக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாடும் (அதாவது நிலப்பரப்பும்) தேவை இல்லை. இந்த அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே தேர்வு செய்யப்படும்.

இதற்கு முன் எந்தவொரு இனக் குழுவும் இத்தகைய நாடு கடந்த அரசுகளை உருவாக்கியதில்லை. இந்தக் கருத்துருவாக்கமானது அரசியலுக்கும் அரசியல் தத்துவங்களுக்கும் எங்களின் பங்களிப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்களா? இந்திய அரசினதும் மாநில கட்சிகளினதும் ஆதரவைக் கோருவீர்களா?

நிச்சயமாக. நாங்கள் அவர்களின் ஆதரவைப் கோருவோம்.

முதலமைச்சர் மு.கருணாநிதியையும் ஏனைய தமிழ் தலைவர்களையும் சந்திப்பதற்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள எண்ணியிருக்கிறீர்களா?

கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், வைகோ, பாண்டியன் மற்றும் ஏனைய தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவதற்கு எண்ணியுள்ளோம். டில்லியிலும் தமிழ் நாட்டிலும் உள்ள கல்விமான்களையும் சமூகத் தலைவர்களையும் கூட சந்தித்துப் பேசுவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியமானது.

நீங்கள் முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை எப்போது நடத்தப் போகிறீர்கள்? எந்த முறையில் தேர்தல்கள் நடத்தப்படப்போகின்றன?

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மக்கள் எங்களைக் கேட்டிருக்கின்றனர். மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஈழத்தை அடைவதற்காக நீங்கள் கொண்டிருக்கக்கூடிய வழிகாட்டு வரைபடம் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தான். அதன் சட்டபூர்வ நிலை, புகழ் மற்றும் அனைத்துலக ஆதரவு காரணமாக அது அதிகார மையமாகும். சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையிலான நடுநிலை அதிகாரம் ஒன்றை அது உருவாக்கும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியுடன் வாழக்கூடிய அரசியல் ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு அது தனது பங்களிப்பை வழங்கும்.

இது தொடர்பில் எந்த நாட்டிடம் இருந்தாவது சாதகமான பிரதிபலிப்பு கிடைத்திருக்கிறதா?

இந்த முயற்சிக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு மிக அத்தியாவசியமானது. ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்போது, எங்கள் முயற்சிக்கு ஜனநாயக நாடுகள் ஆதரவு தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்போதே சில நாடுகளில் இருந்து சாதகமான பிரதிபலிப்புக்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

http://www.puthinam.com/

முத்தமிழ்வேந்தன்
சென்னை

இலங்கையில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் காணாமல் போய்விடும்: கேணல் ஹரிகரன்

சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும்.

சிறிலங்கா அரசு தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தால் கடந்த 30 வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்டவர் கேணல் ஹரிகரன்.

அவரது கட்டுரையின் முழு விபரம் வருமாறு:

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கீழான சிறிலங்கா அரசு, நாட்டின் சுதந்திரத்திற்கான போர் என்ற கூச்சலுடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டைக்குத் தான் சென்றதாகக் கூறியது.

மக்கள் அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாது வாழும் ஒரு நாடு பற்றிய கனவு குறித்தும் அது பேசியது.

இப்போது, பெரும் தொகையான ஆட்களையும் பொருட்களையும் அழியக் கொடுத்து போரை முடித்துவிட்ட பிறகு, அங்கு மேற்கிளம்பிவரும் சமூக - அரசியல் சூழல் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. அந்தக் கனவு கனவாகவே போய்விடக்கூடும்.

இப்போது ஒன்று தெளிவாகிவிட்டது, இலங்கை அரசியலில் வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற சொற்களின் பட்டியலில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் தூக்கி வீசப்பட்டுவிடும். அந்தப் பட்டியலில் 'சிறுபான்மையினர்' என்ற சொல்லும் விரைவில் சேர்ந்துகொள்ளக்கூடும்.

மேற்கிளம்பும் புதிய ஒழுங்கு

இலங்கை முழுவதும் இப்போது ஒரு புதிய ஒழுங்குமுறை மேற்கிளம்பி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கூட்டணிக்குள் மட்டுமல்ல, ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் இந்தப் புதிய ஒழுங்கைக் காணமுடிகிறது.

முதன்மை அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் இதனைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை சமஷ்டிதான் என்று 2002 அமைதிப் பேச்சுக்களின்போது ஏற்றுக்கொண்டிருந்தார்.

இப்போதோ, தமது அரசியல் தேவைக்கேற்றாற்போல் அந்த விடயத்தை பலிபீடத்தில் தூக்கி வீசிவிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவோ அவரது கட்சியோ வெட்கப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதனைவிட மேலானது ஒன்றல்ல.

அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள்

சிறிலங்காவை அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்சிகள், அவர்களின் தலைவர்கள் பலரைப் போலவே இவ்வாறு குத்துக்கரணம் அடிப்பது வழமையானதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. அது அவர்களின் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்னராக எடுக்கப்படும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகளால் பொதுமக்கள் கவரப்படுவார்களாக என்பது சந்தேகத்திற்குரியதுதான்.

சிறிலங்காவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்ததற்கு இத்தகைய அரசியல் இரட்டைப் பேச்சுக்களே முதன்மைக் காரணம். இறுதியில், சரியோ தவறோ, தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்கினார்கள். ஏனெனில் தோற்றுப் போன அரசியல் நடவடிக்கைகளையே அவர்கள் தொடர்ந்தும் பார்த்து வந்திருந்தார்கள்.

மகிந்தவும் அவரது வாக்குறுதிகளும் தேர்தலும்

கிழக்கு மாகாணத் தேர்தல்கள் முடிந்ததும், அரசியலமைப்பின் 13 ஆவது சட்டதிருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், இப்போது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவர் எந்த அவசரத்தையும் காட்டவில்லை போன்றே தோன்றுகின்றது. இதற்கு வலுவான உள்நாட்டு அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கலாம்.

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த தீர்மானித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இப்போது தனக்கு உள்ள பிரபலத்தை/செல்வாக்கை லாபமாக்கி இரண்டாவது பதவிக் காலத்தையும் பெற்றுவிடுவதற்கு அவர் எண்ணுகிறார் என்பது, அண்மையில் அவர் அளித்த நேர்காணலில் இருந்து தெரிகிறது. குறிப்பாக தெற்கில் தனது வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் விரும்புகிறார்.

அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பான்மை மக்களின் அனுமதி உண்மையில் தேவையா?

ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் ஆணை வேண்டும் எனில், அவர்களின் நாடித்துடிப்பை அறிந்து பார்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தலே உண்மையானதாக இருக்கும்.

அரச தலைவர் தனது பதவிக் காலத்தின் ஒரு பகுதியை இழக்காமலேயே நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உதவும்.

மாறாக, அரச தலைவருக்குக் கிடைக்கக்கூடிய உறுதியான ஆதரவானது நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரும் வெற்றி பெறுவதற்குக்கூட வழிவகுக்கலாம்.

அப்படி நடந்தால், சிறிய கட்சிகளில் தங்கியிருக்கும் நிலையில் இருந்து அரச தலைவரை வெளியே கொண்டுவருவதற்கு இது உதவக்கூடும்.

ஆளும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் போன்றோர் அரச தலைவரின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நிலையைக் குறைக்கவும் உதவக்கூடும்.

ஜனநாயகத் தேர்தல் சாத்தியமா?

முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ தமிழர் சனத்தொகையில் 20 விழுக்காட்டினர் விடுவிக்கப்பட்டால், தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடக்கும்.

அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அரசு பதிலளிக்க வேண்டிய கேள்வி இது.

ஏனெனில் மக்களின் விடுதலை தொடர்பில் அரசின் வெவ்வேறு கிளைகளில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. அத்தோடு அரசின் இலக்குக்கும் அது அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரம்பரியமாகவே பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

அனைத்துக் கட்சிக் குழு முடிவு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்ந்த அனைத்துக் கட்சியின் முடிவுகள் தொடர்பிலும் அரச தலைவர் ஆர்வத்துடன் இருக்கிறார். இந்தக் குழு 2006 ஆம் ஆண்டு மகிந்த அரச தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பெரும் ஆரவாரங்களுடன் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முடிவுகள் எவையும் செயற்படுத்தப்படவில்லை என்றால் அது செயல் இழந்துபோன ஏனைய குழுக்களைப் போன்ற ஒன்றாகவே அமையும்.

குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று அரச தலைவர் முறையில் இருந்து அடிமட்டங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்குவது வரையில் பரந்தளவு விடயங்களை அது உள்ளடக்கியுள்ளதாக குழுவின் தலைவர் திச விதாரண கூறினார்.

எனினும் இந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இப்போது ஆபத்தில் உள்ளது. அரசியலமைமைப்பைத் திருத்துவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியின் வரிசையில் இதனையும் வரலாறு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்திய நிலைப்பாடு

இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது.

ஆனால், இவை எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய உறுதியளிக்கப்பட்ட பாதையில் நிகழும் நடவடிக்கைகள் அல்ல.

இது சிறிலங்காவின் குறைபாடும் அல்ல அவர்களின் நடைமுறைப்படுத்தலில் உள்ள குறைபாடு.

சிறுபான்மையினர் அற்ற இலங்கை

சிங்களவர்கள் அல்லாத சமூகத்தவரை சிறுபான்மையினர் என்று சொல்வதை அகற்றிவிடுவதே தனது விருப்பம் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அதாவது சிறுபான்மையினர் அற்ற சிறிலங்காவை உருவாக்குவதே அவர் கனவு.

இது மிகச் சிறந்த உணர்ச்சிகரமான விடயம். ஆனால் அரசியல், பொருளாதார, அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை அந்தக் கனவு அது நனவாகவோ யதார்த்தமாகவோ முடியாது.

சிறுபான்மையினர் இல்லாத சிறிலங்கா என்கிற கனவு, யதார்த்தத்துக்குத் திரும்பும் நடவடிக்கைகளால் கலைக்கப்படும் வரையில் தூரத்தில் தெரியும் கனவாகவே தொடரும். அதுதான் உண்மையாகும் என்று தோன்றுவதான் கவலை தரும் விடயம்.

சாத்தியமாகா அதிகாரப் பகிர்வு

இரு சமூகங்களுமே ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் செய்து கொண்டதன் மூலம் இனப் பிளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மேற்கிளம்பி வரலாம்.

தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு தட்டிக்கழித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும்.

முன்னர் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி 6 மாதங்களுக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் 3 லட்சம் மக்களும் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது இதற்கு மேலும் மேலும் உரமூட்டுவதாக அமையும்.

பல பத்தாண்டு வலிதரும் முரண்பாடுகளின் பின்னர் இப்போது பயம் மற்றும் சந்தேகம் இல்லாத சூழலே இலங்கை மக்களுக்கு வேண்டியது. முடிவெடுக்கும் அதிகாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும் போதே அது சாத்தியமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.

மீண்டும் ஒரு சுழற்சி தேவையா?

சிங்கள - தமிழ் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சிங்கள, தமிழ் அரசியலுக்கு இடையில் 'பாணும் பட்டரும்' மாதிரி அது வந்துவிட்ட பின்னர், ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடையாளத்தை கரு மேகங்களாக அது மறைக்கின்றது.

அதன் விளைவு இலங்கை அரசியலில் இருந்து கடும்போக்கு வாதத்திற்கும் அதில் இருந்து ஆயுத முனைப்புக்கும் அதில் இருந்து கிளர்ச்சிக்கும் அதில் இருந்து பயங்கரவாதத்திற்கும் அதில் இருந்து போருக்கும் அதில் இருந்து இப்போது அரசியலுக்குமாக ஒரு முழுச் சுழற்சியை முடித்துள்ளது.

இதே மாதிரியான சுற்றுக்குள் மீண்டும் ஒருமுறை இலங்கை பயணிக்க வேண்டுமா? இதுதான் இன்று ஆட்சியாளர்கள் முன்னும் மக்கள் முன்னும் உள்ள புறந்தள்ள முடியாத முக்கியமான கேள்வி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/

முத்தமிழ்வேந்தன்
சென்னை

புதன், 29 ஜூலை, 2009

எம். எஸ். சுவாமிநாதன் அவர்களிடமிருந்து கிடைத்த பதில் கடிதம்

நான் அவருக்கு அனுப்பிய கடிதம்
-----------
Dear Mr.Swaminathan

While we have no objection in offering your expertise in the field of
agriculture to Sri Lankan government
to develop North we like to take the following into consideration
before accepting your assignment. You may take note of the fact
that the committee entrusted with the task of re-building North
consists of 19 members. Out of this number there are 18 Sinhalese and
1 Muslim and not a single Thamil. .

(1) The Sri Lankan government is a racist government which has just
killed over 20,000 Thamil civilians during the last phase of the
government military assault against the rebels.

(2) Over 280,000 thousand Thamils are incarcerated in Nazi style
camps in camps in Vavunia without adequate food, water, medical and
housing facilities.

(3) The Rajapakse government has not dismantled the security zones,
confined army to the barracks, lifted restrictions on fishing, travel
despite the claim the war is over.

(4) There are charges against the Sri Lankan government that it has
committed war crimes. Leading human rights groups like AI, HRW etc.
have called for independent investigation of charges of war crimes.

(5) The North east which is the traditional homeland of the Thamils is
under military occupations. The two governors in these two provinces
are retired Sinhala army generals.

(5) The government has not presented any proposal to resolve the
national conflict equitably and justly.

In these circumstances please desist from accepting the assignment
offered by Sri Lanka.


Muthamizh
Chennai

==============================
=======

அவரிடம் இருந்து கிடைத்த பதில் கடிதம்

fromSwami-MSSRF <swami@mssrf.res.in>
toMuthamil78@gmail.com

date25 July 2009 05:36

hide details 05:36 (1 hour ago) Reply

MSS/DB/
24 July 2009

Mr Muthamil
Muthamil78@gmail.com

Dear Muthamil,

I thank you very much for your kind letter. I am grateful to you for
the information you have given. I have neither been offered nor
accepted any assignment in Sri Lanka.

With warm personal regards,

Yours sincerely,

M S Swaminathan

============================
PROF M S SWAMINATHAN
Member of Parliament (Rajya Sabha)
Chairman, M S Swaminathan Research Foundation
Third Cross Street, Taramani Institutional Area
Chennai - 600 113 (India)
Tel: +91 44 2254 2790 / 2254 1229; Fax: +91 44 2254 1319
Email: swami@mssrf.res.in / msswami@vsnl.net